09th January 2022 18:29:22 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் மேலும் ஒரு நலன்புரி திட்டமாக நொச்சிக்குளத்தில் 2008 ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கையின் போது எல்ரீரீஈ இன் மோட்டார் குண்டுவெடிப்பில் தனது இரு கால்களையும் இழந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகிய 7 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் மாற்றுத் திறனாளியான போர் வீரருக்கு சக்கர நாற்காலி மற்றும் ஒரு ஜோடி ஊன்றுகோலும் வழங்கப்பட்டது.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஜீவனி பீரிஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் நன்கொடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அனுசரணையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர், இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி, உதவித் தலைவி திருமதி ஷஷிகா ஹேரத் ஆகியோரால் 29 டிசம்பர் 2021 நவகமுவ பயனாளியின் வீட்டிற்குச் சென்று உதவிகளை வழங்கினர். (ரூ. 30,000.00பெறுமதியான) சக்கர நாற்காலி, திரு அமில யாப்பா மற்றும் அவரது குடும்பத்தினராலும், திரு சுஹுரி ஹுசைன் அவர்களினால் ஊன்றுகோலும் வழங்கப்பட்டது.
திருமதி ஷஷிகா ஹேரத் அனுசரணையாளர்களை ஒருங்கிணைத்ததுடன் கொவிட் 19 சுகாதார பாதுகாப்புடன் நன்கொடை நிகழ்ச்சி நடைபெற்றது.