15th March 2022 16:37:29 Hours
4 வது இலங்கை சமிக்ஞை படையணியின் சமிக்ஞை சிப்பாய்களின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள ஆதரவு மற்றும் நன்கொடையாளர்கள் வழங்கிய அனுசரணையில் சமிக்ஞை சிப்பாய்க்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியும் இராணுவத்தின் பிரதான சமிக்ஞை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் அவர்களின் ஆசிர்வாதத்துடன் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஜீவனி பீரிஸ் அவர்களி்ன் மேற்பார்வையின் கீழ் 4 வது இலங்கை சமிக்ஞை படையணியின் முன்னாள் கட்டளை அதிகாரிகளான லெப்டினன் கேணல் எம்ஏடிஎஸ் முத்துகல மற்றும் மேஜர் ஆர்டிஆர்எம் பெர்னாண்டோ ஆகியோரால் இந்த புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந் நிகழ்வு பௌத்த மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு அனுராதபுரம் மாவட்டத்தின் நொச்சியாகமவில் வசிக்கும் வறிய குடும்பத்திற்கு 2022 மார்ச் 10 ஆம் திகதி வழங்கப்பட்டது. திரு தனசிறி அமரதுங்க மற்றும் அவரது குடும்பத்தினர் முழு வீட்டினதும் செலவுக்கு அனுசரணை வழங்கினர்.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் 4 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.