Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

10th June 2022 17:00:51 Hours

இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையரால் மறைந்த பணி நிலை சார்ஜன் குடும்பத்திற்கு புதிய வீடு

அண்மையில் மாரடைப்பினால் மரணமடைந்த பணி நிலை சார்ஜன் ஆர்ஜிஎஸ்கே தேசப்பிரிய அவர்களின் குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக 2 வது (தொ) இலங்கை சமிக்ஞைப் படையினர் தமது தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தை வழங்கினர்.

இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவிற்கு திருமதி தேசப்பிரிய அவர்களின் கோரிக்கையை அடுத்து, இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஜீவனி பீரிஸ் அவர்களினால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலன்னறுவை லக்க்ஷ உயனவில் இலங்கை சமிக்ஞைப் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டை மறைந்த பணி நிலை சார்ஜனின் மனைவிக்கு வழங்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை (6) நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஜீவனி பீரிஸ் உட்பட சேவை வனிதையர் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

2 வது (தொ) இலங்கை சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பிபீ உடகே, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பயனாளிகள் மற்றும் கிராம மக்கள் இந் நிழ்வில் கலந்துகொண்டனர்.