24th June 2022 15:13:02 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவினர் பொசன் போயா தினத்தை முன்னிட்டு (14) பனாகொடவில் உள்ள போதிராஜராமய (இராணுவ விகாரையில்) க்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவர்களின் சமூகத் திட்டங்களில் ஒன்றாக பாயாசம் வழங்கப்பட்டது.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவுவின் தலைவி திருமதி சஷிகா ஹேரத் மற்றும் சேவை வனிதையர் உறுப்பினர்கள் இணைந்து இந்த உபசரிப்பு விநியோகத்தில் கலந்துகொண்டனர்.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் தளபதியும் இராணுவத்தின் பிரதான சமிக்ஞை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் லலித் ஹேரத், இலங்கை சமிக்ஞைப் படையணியின் பல அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்துகொண்டு இந் நிகழ்வை நடத்துவதற்கு பங்களிப்பு வழங்கினர்.