30th June 2022 16:42:56 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவு அதன் பதவி விலகும் தலைவி திருமதி சஜீவனி பீரிஸுக்கு 12 ஜூன் 2022 பிரியாவிடை விழாவை ஏற்பாடு செய்தது. இந்த பிரியாவிடை இலங்கை சமிக்ஞை படையணி தலைமையக அதிகாரிகள் உணவகத்தில் இடம்பெற்றது.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி ஷஷிகா ஹேரத், முன்னாள் தலைவி திருமதி சஜீவனி பீரிஸை வரவேற்றதுடன், காயமடைந்த மற்றும் இறந்த போர்வீரர்களின் குடும்பங்களின் நலனை மேம்படுத்துவதற்கு திருமதி சஜீவனி பீரிஸ் ஆற்றிய விலைமதிப்பற்ற சேவையை நினைவுப்படுத்தினார். விடைபெறும் தலைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
திருமதி சஜீவனி பீரிஸ் அவர்கள் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி ஷஷிகா ஹேரத் மற்றும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் ஊழியர்களுக்கும், நன்றி தெரிவித்ததுடன், அனைத்து இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் உறுப்பினர்களிடமிருந்தும் தாம் பெற்ற ஒத்துழைப்பையும் ஊக்கத்தையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.