30th June 2022 16:48:42 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி சஷிகா ஹேரத் 12 ஜூன் 2022 இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
2022 ஜூன் மாதத்திற்கான மாதாந்த கூட்டம், இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் 40 உறுப்பினர்களின் பங்கேற்புடன், அதிகாரிகளின் உணவகத்தில் நடைபெற்றது, அங்கு எதிர்கால திட்டங்கள், எதிர் வரும் மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்வு கூறப்பட்டது.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் தளபதியும் இராணுவத்தின் பிரதான சமிக்ஞை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் லலித் ஹேரத், தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சஜித் லியனகே, இலங்கை சமிக்ஞைப் பிரிகேட் தளபதி பிரிகேடியர் இமால் அஸ்ஸலாராச்சி, நிலைய தளபதி பிரிகேடியர் சுதந்த பொன்சேகா, பிரதி நிலைய தளபதி கேணல் எச்டிஜேபீ வீரதுங்க ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.