31st August 2022 19:43:23 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவு இலங்கை சமிக்ஞைப் படையணி தளபதியின் ஒத்துழைப்புடன் "மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை" என்ற தொனிப்பொருளில் பெண் அதிகார் மற்றும் பெண் சிப்பாய்களின் நலனுக்கான விரிவுரைத் திட்டத்தை ஓகஸ்ட் 8 ஆம் திகதி முன்னெடுத்தது.
வளவாளரும், உளவியலாளருமான கெப்டன் விஷ்மிகா டி சில்வா அவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் மூலம் பெண் வீரர்களுக்கு விரிவுரைகளை வழங்கினார்.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ஹேரத், இலங்கை சமிக்ஞைப் படையணியின் பிரதித் தளபதி மற்றும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சஷிகா ஹேரத் ஆகியோர் இந்த ஏற்பாட்டில் கலந்துகொண்டனர்.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன், பணிபுரியும் இடங்கள், பெண் அதிகாரிகள் மற்றும் பெண் சிப்பாய்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.