03rd June 2023 13:20:46 Hours
இலங்கை சமிக்ஞை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இலங்கை சமிக்ஞை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் முன்னாள் தலைவிகளுக்கான ஒன்றுகூடலை சனிக்கிழமை (மே 20) பனாகொட இலங்கை சமிக்ஞை படையணியின் தலைமையகத்தின் அதிகாரிகள் உணவகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இலங்கை சமிக்ஞை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நளினி ரத்நாயக்க, கடந்த காலத் தலைவர்களை வரவேற்றதுடன், பல தசாப்தங்களாக சேவை வனிதையர் பிரிவின் அங்கம் வகிக்கும், ஓய்வு எடுத்துக் கொண்ட உறுப்பினர்களிள் சேவைகளைப் பாராட்டினார்.
இசை மற்றும் நடன அம்சங்களுடன் நிகழ்வு நிறைவுற்றது.