Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

05th July 2023 23:01:26 Hours

இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையரால் இரத்த தான நிகழ்வு

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு கொழும்பு இராணுவ வைத்தியசாலையுடன் இணைந்து இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) பொல்ஹெங்கொட இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் நடாத்தியது.

இந்த நிகழ்ச்சி 7 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சிறப்பு புலனாய்வு பிரிவின் சேவை வனிதையர் பிரிவு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் இரத்த தானம் செய்தனர்.

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியும் ஒழுக்க பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சீ, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியந்திகா டி சொய்சா, இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் ஏஎம்ஆர் அபேசிங்க, இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.