03rd June 2023 13:26:28 Hours
ராகமயில் உள்ள எசிசிசி சிறுவர் அபிவிருத்தி நிலையத்திலுள்ள சிறுவர்களுக்கு மே 13 இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் நன்கொடைகள் வழங்கப்பட்டன.
இராணுவ போர் கருவி படையணி படைத் தளபதி, நிலைய தளபதி, தள ஆயுதக் களஞ்சியத்தின் தளபதி ஆகியோரின் ஆதரவுடன் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பந்துனி மாக்ரெட் ரணசின் ரணவக்க அவர்களினால் இத் திட்டத்தில் சிறார்களுக்கான பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.
அதற்கமைய அவர்களுக்கு சுவையான மதிய உணவும், அதைத் தொடர்ந்து பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் வழங்கப்பட்டது. சேவை வனிதையர் பிரிவின் தலைவி கார்பாக திருமதி கேஎம்எடபிள்யூகே பெரேரா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.