Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

04th June 2023 14:44:45 Hours

இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் ராகம ரணவிரு செவன போர் வீரர்களை சந்திப்பு

இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பாண்துனி மக்ரெட் ரணசின் ரணவக்க சார்பாக, இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் குழு ஒன்று சனிக்கிழமை (மே 27) ராகம ரணவிரு செவன போர் வீரர்களைத் சந்தித்தனர்.

இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதி மற்றும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் நிலைய தளபதி, இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவினர் மற்றும் ராகம ரணவிரு செவன தளபதி ஆகியோரால் இந்த திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

அந்த போர்வீரர்களுடன் உரையாடிய அவர்கள் அந்த போர்வீரர்களுக்கு சில பரிசுகளை வழங்கினர். பல சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். இந் நிகழ்வில் தலைவியை பிரதிநிதித்துவப்படுத்தி திருமதி நிமாலி விஜேகோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.