07th April 2022 20:17:16 Hours
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தீபிகா பிரசாந்தி சந்திரசேன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவினால் பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் பணிபுரியும் சிவில் ஊழியர் ஒருவரது தாயாருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
மேலும் பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவு 15 மார்ச் 2022 அன்று ‘பயிர்ச் செய்கை மற்றும் கிருமிகளை அடையாளம் காணுதல்’ என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை ஏற்பாடு செய்தது. இச் செயலமர்வை விவசாய பயிற்றுனர் திரு டிஎஸ்கேபீ குணசேகரன் அவர்கள் வழங்கியதுடன், பொறியியல் சேவைகள் படையணியின் சுமார் 150 சிப்பாய்கள் விரிவுரையில் கலந்து கொண்டனர்.