20th October 2022 19:57:12 Hours
மறுவாழ்வு அளிக்கப்படும் போர்வீரர்களின் நலம் விசாரிக்கும் நோக்குடன், பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவினர் சனிக்கிழமை (15) கம்புருபிட்டிய 'அபிமன்சல-3' நல விடுதிக்கு விஜயம் செய்தனர்.
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தீபிகா பிரசாந்தி சந்திரசேன அவர்களின் தலைமையில், பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் பெண்கள், காயமடைந்த போர்வீரர்களுக்காக புதிய மெத்தைகள், தலையணைகள், உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொதிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ந் விடுதிக்கு எடுத்துச் சென்றனர்.
தலைவி, உபதலைவி திருமதி வஜிர எதிரிசிங்க மற்றும் வருகை தந்திருந்த பெண்கள், அவர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கப்படுவதற்கு முன்னர் போர்வீரர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.