26th August 2022 13:55:36 Hours
பொதுமக்களின் தற்போதைய பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு இலங்கை பீரங்கி படையணியின் சேவை வனிதையர் பிரிவினால் இலங்கை பீரங்கி படையணியின் 45 சிவில் ஊழியர்களுக்கு பனாகொட படையணி தலைமையகத்தில் ஓகஸ்ட் 01 ம் திகதி உலர் உணவுப் பொதிகளை நன்கொடையாக வழங்கினர்.
இலங்கை பீரங்கி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாமா வனசிங்க அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய நன்கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை பீரங்கி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, இலங்கை பீரங்கி படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.