25th March 2022 19:39:59 Hours
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை கவசப் வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் 6 வது இலங்கை கவச வாகன படையணி மற்றும் கவசப் வாகன படையணி பயிற்சி நிலையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 வீரர்களின் குடும்பங்களுக்கு ஆறு தையல் இயந்திரங்கள் மோதரையில் உள்ள ரொக் ஹவுஸ் மண்டபத்தில் மார்ச் 09 ம் திகதி அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இத் திட்டம் சேவை வனிதையர் பிரிவினரின் நிதியுதவியுடன் படையினரின் குடும்பங்களின் பொருளாதார தரத்தை உயர்த்துவதற்காக முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை கவசப் வாகன படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் (திருமதி) ஹர்ஷனி போதொட்ட, சிரேஷ்ட உறுப்பினரான திருமதி வசந்தி பத்திரத்தன, சிரேஷ்ட உறுப்பினர் திருமதி சமிலா விஜேரத்ன, பயனாளிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.